Home » » கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் இந்த அரசாங்கத்தில் தரமுயரும்- ஞானசார தேரர்

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் இந்த அரசாங்கத்தில் தரமுயரும்- ஞானசார தேரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பெற்றுத்தருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக நேற்று (புதன்கிழமை) இரவு சென்றிருந்தார்.

இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதம் இருந்தவருமான சந்திரசேகரம் ராஜன், ஞானசார தேரரிடம் கல்முனை உப பிரதேச செயலகம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் தரம் உயர்த்தித் தருவதாகவும், எனவே அவசரப்படாமல் எதிர்பார்த்து காத்திருக்குமாறும் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |