மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதியில் இன்று (14) சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்கள் முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணியவாறு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு, வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவோரின் பாதுகாப்புக் கருதி கை கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: