Home » » தேர்தல் வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை..

தேர்தல் வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை..

பொதுத் தேர்தலின் வாக்களிப்பு காலத்தில் அனைத்து அரச ஊழியர்களும் எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பைக் கொண்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அரசியல் உரிமை இருந்தாலும், இல்லாவிடினும் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின்

கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் ஆயத்தப்படுத்தும் நிகழ்வுகளில் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகவே, அனைத்து அரச ஊழியர்களும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதைத் தவித்து கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கு வருமாறு நீதிமன்ற உத்தரவு அனுப்பியுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |