Advertisement

Responsive Advertisement

ஹோமாகமவில் மாணவர்கள் உட்பட 65 பேர் தனிமைப்படுத்தலில்!

கொழும்பை அண்மித்த ஹோமாகம பிரதேசத்தில் மேலும் 65 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் தனியார் மேலதிக வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களும் அவர்களது வீட்டாரும் இருக்கின்றனர்.

ஹோமாகம கஹத்துடுவ பிரதேசத்தில் உள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரது மகன் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அவர் கலந்துகொண்ட மேலதிக நேர வகுப்புகளுக்கு வந்தவர்களும் தற்சமயம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments