Home » » கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் (14) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள் கொழும்பு 1-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |