Home » » முகக்கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக்கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பிரவேசித்த ஆயிரத்து 200 இற்கும் அதிகமானோர்; தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கென முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கோட்டை, பொரள்ள, தெமட்டகொட, கடவத்தை, கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |