Home » » வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கான வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான ஆலோசனை போக்குவரத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நியமிக்கப்பட்ட குழுவினால் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனையை அமைச்சரவைக்கு முன்னைவக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரச வேலை ஆரம்பிக்கும் நேரம் 9 மணியாகவும் முடிவடையும் நேரம் 4.45 மணியாகவும் ஆலோசனை வழங்கப்ப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் துறை காலை 9.45 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.45 மணி வரை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |