Home » » முக்கிய பல தீர்மானங்களை எடுக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு ஒன்று கூடியது !

முக்கிய பல தீர்மானங்களை எடுக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு ஒன்று கூடியது !


அபு ஹின்ஸா 

ஶ்ரீ லங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு நேற்று (6) திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் அமைப்பாளருமாகிய கலாநிதி எம்.எஸ். அப்துல் வாஸித் (பொத்துவில் பி.ச.தவிசாளர்) அவர்களது இல்லத்தில் மத்திய குழுவின் தலைவர் சட்டத்தரணி சீ.எம். பைசால் முகைடீன் தலைமையில்  கூடியது.

குறித்த ஒன்று கூடலானது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கலாநிதி எம்.எஸ். அப்துல் வாஸித் (தவிசாளர்) அவர்களின் தேர்தல் முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராய்வதும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பிலும் பேசப்பட்டது.

மேலும் ஒன்று கூடலில் கலந்து கொண்ட அனைவரும் தேர்தல் பணிகளில் அர்பணிப்போடும் தியாகத்தோடும் நாம் அனைவரும் செயற்படவுள்ளோம் என உறுதிபூண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற வேட்பாளர் கலாநிதி எம்.எஸ். அப்துல் வாஸித், மத்திய குழுத் தலைவர் சீ.எம். பைசால் முகைடீன், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச். அப்துல் றஹீம், எம்.எச்.எம். கியாஸ், எஸ்.டி. சபுறா உம்மா, ஜுனைதா வஹாப்டீன் மற்றும் முன்னால் உதவித் தவிசாளர் ஏ. பதுர்க்கான் ஆசிரியர், இளைஞர் அமைப்பாளர் புகாருடீன் பசூர்கான் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |