Home » » மட்டக்களப்பு நகரில் ஒருவரை காணவில்லை- உதவுமாறு உறவினர்கள் வேண்டுகோள்!

மட்டக்களப்பு நகரில் ஒருவரை காணவில்லை- உதவுமாறு உறவினர்கள் வேண்டுகோள்!

க.விஜயரெத்தினம்)

துறைநீலாவணை 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இலக்கம் 384/5B ,சின்ன லூர்த்து மாதா வீதி,சின்ன உப்போடை,மட்டக்களப்பு எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி பார்த்தசாரதி(வயது-52)என்பவர் கடந்த புதன்கிழமை(17.6.2020) முதல் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரி திருமதி.பவாணி தணிகாசலம் தெரிவித்தார்.

இவ்வாறு தனது சகோதரர் சா.பார்த்தசாரதி காணாமல் போனது பற்றி மட்டக்களப்பு நகரில் உள்ள தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
காணாமல் போனவர் ஒரு மனதளவில் நலிவுற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரை யாராவது நேரில் கண்டாலோ அல்லது இவர் பற்றிய தகவலை அறிந்தாலோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பின்வரும் உறவினர்களின் தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல்களை அறியத்தருமாறு தனது சகோதரி கேட்டுக்கொண்டார்.

திருமதி.பவாணிதேவி தணிகாசலம்(சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர்-0777962162),
சா. மகாலிங்கம்(0771010115),
சா.தேவசகாயம் (0772742730)
சா. இராசேந்திரன்(06722 25224)என்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |