Home » » மட்டக்களப்பின் பல இடங்களில் திடீரென வற்றிப்போன கிணறுகள்

மட்டக்களப்பின் பல இடங்களில் திடீரென வற்றிப்போன கிணறுகள்

மட்டக்களப்பில் நாவலடி தொடக்கம் அக்கறைப்பற்று வரை கரையோரத்தில் உள்ள கிணறுகள் யாவும் நேற்று திடீரென வற்றிப்போயுள்ளன.
சுமார் 3 அடிக்கும் மேல் நீர் வற்றிப்போய் உள்ளது. சில கிணறுகளில் அடி மண் தெரிந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாவலடி, கல்குடா, நாவற்குடா, காத்தான்குடி, கிரான்குளம், ஆரையம்பதி,தாளங்குடா, புதுக்கடியிருப்பு, குருக்கள்மடம், செட்டிப்பாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம் போன்ற இடங்களிலேயே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறுஅண்மையில் பொங்கி வழிந்த அற்புதம் நடந்தது.
ஒரு பக்கம் கிணறு நிரம்பி வழிவதும், மறு பக்கம் அனைத்து கிணறுகளும் வற்றிப்போவதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |