Home » » மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊடரங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கடந்த 11 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 8 மணிக்கு மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.
ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |