Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்று! இலங்கையின் தற்போதைய நிலவரம்


கொழும்பு மாவட்டத்திலேயே இதுவரையில் அதிகளாவன கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 158 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அடுத்தபடியாக, களுத்துறை மாவட்டத்தில் 65 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும், புத்தளத்தில் 41 பேரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் நேற்று மூவர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் நாடு முழுவதும் 25 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்த நிலையில் வெளியேறியுள்ளனர். இதுவரையில் 162 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, தற்போது 521 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments