Home » » நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது...

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது...

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இதன் போதே ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் அவர் மன்றுரைத்தார்.
இந்நிலையில் தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 1027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |