Home » » கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

கொவிற் - 19    தொற்றுக்கான  தடுப்பு நடவடிக்கை செயற்பாடுகளைப் பாராட்டி கல்முனை  பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப்  சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

( அஸ்ஹர் இப்றாஹிம்)

  இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும்  கொவிற் - 19   எனும் கொரணா வைரசு தொற்றுக்கான  தடுப்பு நடவடிக்கை செயற்பாடுகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில் இடம்பெற்றது.
சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டொக்டர் அனில் முனசிங்க  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நாட்டிலுள்ள  26 பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவுகளுக்குமான பொறுப்பு வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்வில் நாட்டில்  கொவிட்-19 தொற்று  தொடர்பாக முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் பற்றிய  கலந்துரையாடலும் இடம்பெற்றது
.இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட கல்முனை  பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப்  சுகாதார திணைக்கள  பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டொக்டர் அனில் முனசிங்க  அவர்களினால்   பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |