Home » » யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் க.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்..
மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று இருப்பது ஏப்ரல் 13 அன்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இன்றையதினம் 76 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு,
போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 9 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.
ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - ஒருவர்.
வவுனியா பொது வைத்தியசாலை - 3 பேர்.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலை - ஒருவர்.
முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.
முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் - 54 பேர்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிறிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் )
இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஏனைய 75 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |