Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அத்துமீறி நுழைந்த கொரோனா வைரஸ் நோயாளியை தாக்கிய பொது மக்கள்

ஜா-எல - தேலதுர பகுதியில் உள்ள தனியார் இடம் ஒன்றில் தேங்காய் திருடும் நோக்கில் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது பிரதேச மக்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் பிரதேச மக்கள் அவரை பமுனுவ காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக றாகம போதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் செல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அவர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தால் அப்பகுதி மக்களும், பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments