Home » » கொரோனா வைரஸ் பரவியது எப்படி? இலங்கையை சேர்ந்த பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

கொரோனா வைரஸ் பரவியது எப்படி? இலங்கையை சேர்ந்த பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்


விண்வெளியில் இருந்து பூமிக்கு விழுந்த விண்கல் ஒன்றின் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெக்கிங்கம் விண்வெளி ஆய்வு மையத்தின் பேராசிரியரான இலங்கையை சேர்ந்த சந்திர விக்ரமசிங்கவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் 11ம் திகதி இரவு 12.16 மணியளவில் வடகிழக்கு சீனாவில் இந்த விண்கல் சிதறி வீழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விண்கல் விழுந்த காட்சி சீனாவின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
விண்கல் வெடித்தபோது சிதறிய மெல்லிய கார்பன் தூசியுடன் நூற்றுக்கணக்கான, வைரஸ் துகள்கள் பூமியில் விழுந்திருக்கலாம் என்று பேராசிரியர் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 166 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |