கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்துவிட்டது என அறிவித்து பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி செல்ல முயன்ற சீனாவுக்கு 2 ஆம் கட்ட கொரோனா தொற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றிற்கு சீனாவில் தற்போதுவரை 82 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 4 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்ததாகவும் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும் கொரோனா வைரஸை ஒழித்துவிட்டோம் என கூறி பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு சென்ற சீனர்கள் 8 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மீண்டும் நாட்டிற்குள் கொரோனா வந்துவிட்டதாக அஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்ய எல்லையில் உள்ள ஷான்ஜி மாகாணம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஷான்ஜி மாகாணம் முடக்ப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடி பேர் முடக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: