யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் கிளிநொச்சி பகுதியில் இருவருக்கும் முல்லைத்தீவு பகுதியில் ஒருவருக்கும் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று பரிசோதிக்கப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொாரோனா தொற்றுக்கான பரிசோதனை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: