முதன்முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான விலங்கினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள புரோன்ஸ் விலங்கியல்சாலையில் உள்ள மலாயன் இன பெண் புலி ஒன்றுக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடியா என்ற இந்த நான்கு வயது புலி அதன் சகோதரி மற்றும் சிங்கங்களுக்கு சில குணங்குறிகள் தென்படவே அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போதே நடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த புலியின் காப்பாளரிடம்இருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த புலி தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: