ஸ்ரீலங்காவில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து ஸ்ரீலங்காவை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமகாலத்தில் ஸ்ரீலங்காவில் நிலவும் அதிக வெப்ப நிலை மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் அளவை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஸ்ரீலங்கா குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என மெல்பேர்னை அடிப்படையாக கொண்ட ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகள்,
0 comments: