Home » » கல்முனையில் வீடுவீடாக சென்று வழங்கப்பட்ட மானியம்!

கல்முனையில் வீடுவீடாக சென்று வழங்கப்பட்ட மானியம்!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் சமுர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேற்பார்வையில் வீடு வீடாக சென்று மானியம் வழங்கி வைக்கப்பட்டது .
சமுர்த்தி பெற தகுதியுடையோர் பட்டியலில் காத்திருப்போர் 697 பேருக்கான இரண்டாம் கட்ட மானியமாக பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது.
எஸ் .தவசீலன் வங்கி முகாமையாளர். தலைமை சமுர்த்தி முகாமையாளர் கே.இதயராஜா,ஏ.எல்.எம்.நஜீப் சமூர்த்தி திட்ட முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்களாகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
சமுர்த்தி பெறும் 5108 குடும்பத்திற்கு இதற்கு முன்னர் தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |