கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தற்பொழுது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
பூசை ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்களும் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாவடியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவரகளில் 18 பேருக்கு நேற்றையதினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளட்பட்டது இன்று மாலை பரிசோதனை அறிக்கை வெளிவரும் எனவும் அறிவித்துள்ளார்.
0 comments: