இலங்கையில் மேலும் மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில் 162 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் 132 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் அறிகுறிகளுடன் 250க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: