Home » » கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் சடலங்கள்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் சடலங்கள்

இந்தோனிசியா விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரேபியாவிலிருந்து 285 பயணிகளுடன் இந்தோனேசியாவை நோக்கி சென்ற லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றே இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இவ் விமானத்திலிருந்து நோய்வாய்ப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் விமானம் இறக்கப்பட்டுள்ளது.
இவ்விரு சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |