Home » » பிறந்துள்ள சார்வரி புதுவருடம்! எந்த ராசியினர் அதிஷ்டத்தின் உச்சியை தொட போகிறார்கள் தெரியுமா?

பிறந்துள்ள சார்வரி புதுவருடம்! எந்த ராசியினர் அதிஷ்டத்தின் உச்சியை தொட போகிறார்கள் தெரியுமா?


அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான 'சார்வரி' சித்திரைப் புதுவருடம் இன்று இரவு மலர்ந்துள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி புதுவருடம் இன்றிரவு 7.26 மணிக்குப் பிறந்துள்ளது..
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இரவு 8.23 மணிக்குப் பிறந்துள்ளது.. நாளை காலை பொங்கல் வழிபாடு செய்யலாம்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி,
விசு புண்ணியகாலம் பிற்பகல் 3.26 மணிமுதல் முன்னிரவு 11.26 மணி வரையிலான காலப்பகுதியாகும்.
இக்காலப்பகுதியில் யாவரும் மருத்துநீர் சங்கற்பித்து சிரசில் இலவமிலையும், காலில் விளாவிலையும் வைத்து ஸ்ஞானம் செய்ய வேண்டும்.
வெள்ளைப்பட்டாடையாயினும் வெள்ளைக்கரை அமைந்த புத்தாடையாயினும் அணிதல் நல்லது.
தோச நட்சத்திரங்களாக அஸ்வினி, கார்த்திகை 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள், மிருகசீரிடம் 1ஆம் 2ஆம் பாதங்கள், மகம், பூரம், மூலம், உத்தராடம் 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் சங்கற்பித்து ஸ்ஞானம் செய்து தான தருமம் செய்து இறைவழிபாடு செய்ய வேண்டும்.
கைவிசேடம் வியாழன் 16.04.2020 முன்னிரவு 10.37 முதல் 12.23 வரை, வெள்ளி 17.04.2020 அதிகாலை 4.17முதல் 5.47வரை, திங்கள் பிற்பகல் 12.06 முதல் 1.46 வரை நடத்தலாம்.
வித்தியாரம்பம் மற்றும் விருந்துண்ணல் என்பன 20.04.2020 பகல் 12.06 - 01.46 வரையும், 27ஆம் திகதி பகல் 12.40 - 01.18 வரையான காலப்பகுதியில் நடாத்தலாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி,
இன்று மாலை நாழிகை 25.52 (மாலை 04.23 மணி) முதல் நள்ளிரவு நாழிகை 45.52 (இரவு 12.23 மணி) வரையும் புண்ணியகாலம் ஆகும்.
இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளாவிலையும், காலில் கடம்பமிலையும் வைத்து ஸ்நானஞ்செய்து வெண்ணிறப்பட்டாயினும் அல்லது வெள்ளைப்புது வஸ்திரமாயினும் தரிக்கலாம்.
சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பரணி, கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள், பூரம், மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம் ஆகியன.
இவர்கள் கட்டாயம் மருத்துநீர் வைத்து வழிபடல் அவசியமாகும்.
கைவிசேடம் திங்கள் 13.04.2020 பின்னிரவு 5.20 - 5.50 வரை, வியாழன் 16.04.2020 இரவு 07.00 - 08.00 வரை வியாழன் 16.04.2020 இரவு 10.25 - 11.30 வரை நடாத்தலாம்.
வித்தியாரம்பம் 20.04.2020 காலை 09.15 - 09.45 யும் விருந்துண்ணல் : 20.04.2020 பகல் 09.15 - 09.45 வரை 22.04.2020 மாலை 06.00 - 07.30 வரையும் இடம்பெறலாம்.
பிறக்கவுள்ள இந்த சித்திரை புத்தாண்டில் 12 ராசியினருக்கும் எப்படியான பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்,




மேஷம்
சார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ்புத்தாண்டு அதிக சந்தோஷங்களை தரப்போகிறது.
மிதுனம்
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. என்ற போதும் அஷ்டம சனி ஆட்டி வைக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
சிம்மம்
உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களுக்கு சங்கடங்களை விட சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
சார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். துணிச்சலாக நீங்கள் எடுக்கப்போகின்ற முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இந்த சார்வரி புது வருடம் உங்க ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
மகரம்
இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும், சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும்.
கும்பம்
சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
மீனம்
உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |