Home » » கொரோனா வைரஸ் தாக்கம்! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் தாக்கம்! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ்.சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, நிலாவெளி மற்றும் கப்பல்துறை போன்ற வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்து வகைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஞ்சி, வெள்ளைப்பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |