Advertisement

Responsive Advertisement

அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட உள்ள ஊரடங்கு சட்டம் மக்களின் பாதுகாப்பை உருதிப்படுத்தும் சுகாதார ஊரடங்கு சட்டம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்,
எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட உள்ள ஊரடங்கு சட்டம் மக்களின் பாதுகாப்பை உருதிப்படுத்தும் சுகாதார ஊரடங்கு சட்டமாகும்.
ஏனைய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெவ்வேறு துறையினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இலங்கையில் மக்களுக்கே மன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments