Home » » இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.


கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் தற்போது வரை 649 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

136 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |