மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று, வம்மியடியூற்று கிராம சேவகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கசிப்பு உற்பத்திகள் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கான கோடா கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது மட்டக்களப்பின் பல இடங்களில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடு அதிகரித்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: