Home » » கொரோனாவால் பழம்பெரும் நடிகை மரணம்; சினிமா வட்டாரத்தில் பெரும் சோகம்!

கொரோனாவால் பழம்பெரும் நடிகை மரணம்; சினிமா வட்டாரத்தில் பெரும் சோகம்!

ஒவ்வொரு வருட இறுதியிலும் மழை, புயல். வெள்ள பாதிப்புகள் தமிழகத்தில் நேர்வது உண்டு. ஆனால் கடந்த 2019 இறுதியில் அப்படியாக எதுவும் இல்லையே என நிம்மதி பெரு மூச்சுவிட்ட நேரத்தில்
இந்த 2020 3 மாதங்களை முழுமையாக கடக்கும் முன்னரே சத்தமில்லாமல் புகுந்துள்ள கொரோனா வைரஸ் நோய் பலருக்கும் எதிர்பாராத பெரும் அதிர்ச்சி தான்.
இதனால் பல மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கதை தொடர் கதையாகியுள்ளது.
இந்நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகையும் எழுத்தாளருமான பாட்ரிசியா போஸ்வார்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2 ல் இறந்துவிட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
பழம் பெரும் நடிகையான அவருக்கு வயது 86.
தொடர்புபட்ட செய்தி ......
கொரோனா வைரஸால் பிரபல நடிகர்-நடிகைகளும் பலியாகிறார்கள். ஏற்கனவே ஹொலிவுட் நடிகர்கள் அண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தற்போது இன்னொரு நடிகையும் பலியாகி உள்ளார்.. அவரது பெயர் பேட்ரிசியா பாஸ்வொர்த். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் அதிகமானதால் பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
ஆனால் சிகிச்சை பலன் இன்றி பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இவர் பிரபல எழுத்தாளரும் ஆவார்.
பேட்ரிசியா மரணம் அடைந்த தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள அவரது வளர்ப்பு மகள் பியா ஹட்சவ், “கொரோனா வைரஸ் எங்களின் திறமையான வளர்ப்பு தாயின் உயிரை எடுத்துக்கொண்டது. அவர் அன்பானவர், இரக்க குணம் கொண்டவர்” என்று கூறி உள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |