ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தல் காலம் இரண்டு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய 34 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது.
இந்த நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தனிமைபபடுத்தல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில்
ஸ்ரீலங்காவில் பல தனிமைப்படுத்தப்பட்டநிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.கட்டாய இரண்டு வார தனிமைப்படுத்தலை நிறைவு செய்பவர்களிடம் மேலும் 14 நாள் காலத்திற்கு தனிமைப்படுத்துமாறு கூறினார்.
"சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள் கூட தங்களை தனிமைப்படுத்த மேலும் இரண்டு வாரங்கள் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறினார்.
கட்டாய உத்தரவு இல்லை என்றாலும், மக்கள் நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தலை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறுகையில்,
மார்ச் 11 முதல் இலங்கைக்கு திரும்பிய 43,500 பேர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பதிவு செய்துள்ளனர், அவர்களில் 18,000 பேர் ஏற்கனவே இந்த பணியை முடித்துவிட்டனர் என்றார்.
COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் பரிசோதனை முடுக்கிவிடப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவர்களின் முக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments: