Home » » இறக்குமதி பொருட்களை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானம்!

இறக்குமதி பொருட்களை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானம்!

எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை இரத்து செய்யவும் வரையறைக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் காலத்தில் இலங்கையில் வலுவான உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டே அரசாங்கத்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் கலந்துரையாட உலக நாடுகளை ஒன்றிணைத்த சம்மேளம் ஒன்றை நடத்துவதற்கும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |