Home » » ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தி

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தி

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் அபாயகர பகுதியை தவிர்த்து ஏனைய மாட்டங்களுக்கு அவ்வப்போது தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அபாயகர பகுதிகளான கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும்.
இதனையடுத்து குறித்த மாவட்டங்களுக்கு நாளை பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |