மறுதிகதி அறிவிக்கப்படாமல் அண்மையில் மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 14 நாட்கள் மூடப்பட்டதாகவும் விவசாயிகள், நாட்டின் அத்தியவசிய தேவைகளுக்காக அர்ப்பணிப்புகளை செய்த அனைவரும் நன்றி கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகளை தம்புள்ளை மாநகர சபை மேற்கொண்டு வருகிறது. தினமும் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.
0 comments: