Home » » மத்திய நரம்பு மண்டலத்தை குறி வைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறி - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மத்திய நரம்பு மண்டலத்தை குறி வைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறி - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் அறிகுறிகளுள் சில சமயங்களில் பல நரம்பியல் அறிகுறிகளும் இருக்கலாம் என்று அமெரிக்காவின் நரம்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பல நோயாளிகள் கடுமையான சோர்வு, ட்ரைஜீமினல் நியூரால்ஜியா, முழுமையான அல்லது கடுமையான அனோஸ்மியா மற்றும் மயால்ஜியாவை உட்பட பல நோய்களை தெரிவிக்கின்றனராம்.
“கொரோனா வைரஸ்கள் எப்போதுமே சுவாசக் குழாயுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், அவை நரம்பியல் நோய்களைத் தூண்டும் மத்திய நரம்பு மண்டலத்திலும் படையெடுக்கக்கூடும் என்பதையும் அதிகரிக்கும் சான்றுகள் காட்டுகின்றன” என்று மருத்துவ வைராலஜி ஜர்னலில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியுள்ளது.
கொரோனாவின் சில நரம்பியல் அறிகுறிகள்...

இது அடிப்படையாக ஒரு தசை வலி ஆகும். கொரோனா ஒருவரைத் தாக்கியிருந்தால், உடலின் எந்த பகுதியிலும் தசைகள் சிவந்து இருத்தல் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
இது கொரோனாவின் பொதுவான அறிகுறியாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், மூட்டு வலி மற்றும் தசைநாண்களின் வலி பற்றியும் புகாரளிக்கலாம்.
சீனாவில், 61 வயதான ஒரு பெண் குய்லின்-பார் நோய்க்குறி என்ற ஆட்டோ இம்யூன் நியூரோபதி நிலை அறிகுறிகளுடன் வந்தார்.
இந்த நிலையின் அறிகுறிகளில் காலில் பலவீனம் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவை அடங்கும். இந்த பெண்ணுக்கு காய்ச்சல், இருமல், மார்பு வலி என்று எதுவும் இல்லை.
ஆனால் அப்பெண்ணுக்கு தசை பலவீனம் மற்றும் டிஸ்டல் அரேஃப்ளெக்ஸியா இருந்தது, அது காலப்போக்கில் மோசமாகிவிட்டது.
வறண்ட இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனாவின் பொதுவான சில அறிகுறிகளும் நாளடைவில் அவருக்கு ஏற்பட்டது.
கொரோனாவில் நரம்பியல் அறிகுறிகள் அரிதானவை என்று நிபுணர்கள் கிட்டத்தட்ட ஒருமனதாக ஒப்புக் கொள்கிறார்கள்.
மிகவும் குறைவான அளவில் இந்த அறிகுறிகள் நோயாளிகளிடையே தெரிய வரும். ஆனால் அது தெரியவில்லை. எனவே மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், இதுப்போன்ற அறிகுறிகளிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில சமயங்களில் நோயாளிகள் வாசனை இழப்பு மற்றும் சுவை தெரியாமல் இருப்பது போன்ற பிற அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம்.
இன்னும் தீவிர நிலையில் வலிப்பு, முதுகெலும்பு நோய் மற்றும் மூளைத் தண்டுவட நோய் போன்ற அறிகுறிகளும் தெரிய வரலாம்.
மேரிலாந்தின் பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசனின் சில நிபுணர்கள், ‘மூளைத் தண்டு செயலிழப்பு கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுவாச இயக்கி இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |