Home » » கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிப்பு

கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிப்பு


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளமையை அடுத்தே சட்டவிரோத மது உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக மதுவரி திணைக்கள தென்மாகாண உதவி ஆணையாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அனுமதி பெற்ற மதுபானசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து கிராமப்புறங்களில் சட்டவிரோத மது உற்பத்திகள் அதிகரித்துள்ளன.
இதன்காரணமாக தமது திணைக்களம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சன்ன வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |