Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சமுர்த்தி பெறுவதற்கு தகுதியிருந்தும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு கொடுப்பனவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு !!


நூருல் ஹுதா உமர். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் திட்டங்களில் ஒன்றான கொரோனா வைரஸ் (Covid 19) தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்துள்ள சமுர்த்தி பெறுவதற்கு தகுதியிருந்தும் கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அரசினால் ஒரு தடவை வழங்கப்படும் 5000/- கொடுப்பனவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (08) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.எம்.எஸ்.எம்.றஸ்ஸான், உதவி பிரதேச செயலாளர் எ.கே. றொஸீன்தாஜ், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.கே.எம்.நழீம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம். ஹமீட் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டு   5000/- கொடுப்பனவை வழங்கி வைத்தனர்


Post a Comment

0 Comments