Home » » ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம்

ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸினை கட்டுப்படத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டள்ள சிறப்பு செயல்திறன் சீராய்வுக்குழுவின் கூட்டமே இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிதாக இனங்காணப்படும் புதிய தொற்றாளர்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை பலப்படுத்துவது, ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து சேவையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |