Home » » மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

வவுனியா - இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இன்று மாலை தனது அயல் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் உடனடியாக அவர் அவசர அம்பியூலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ். மங்களேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்ததுடன் இரு நாட்களாக இடி மின்னலுடன் மிதமான மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |