Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான கல்வியமைச்சின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே சமயம் புலமைப்பரிசில் பரீட்சையும் ஓகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்களும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 338,000 விண்ணப்பங்களும் தமக்கு இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.
எனவே திட்டமிட்டபடி குறித்த பரிட்சைகளை நடத்த அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments