நேற்று (26/04/2020) இரவு 7.30, மணியளவில் மகிழடித்தீவு ஊரில் ஒருவீட்டில் சென்று தண்ணீர் கேட்டு வாங்கி அருந்தி விட்டு வேறொரு வீட்டில் உணவு கேட்டு வாங்கி உண்டுவிட்டு வீதியில் வரும்போது அவரிடம் சந்தேகம் கொண்ட சில ஊர் இளைஞர்கள் உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் விடயத்தை கூறி அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிசார் பொதுசுகாதார பரிசோதகர் இணைந்து அவரை அம்புலன்ஷ் வண்டியில் ஏற்றி தற்போது மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் “அகமட் ஹுசைன்” என தனது மெயரை குறிப்பிட்டு கொழும்பில் இருந்துவந்தாகஒருவரிடமும், அம்பாறையில் இருந்து வந்ததாக வேறொருவரிடமும் மாறி மாறி ஒரு மன நோயாளர் போன்று கதைத்துள்ளார்,
சம்மந்தப்பட்டவர் ஏதோ தனிமைபடுத்தல் முகாமில் இருந்து தப்பிவந்தவரா?
அல்லது சாதாரண ஒருவரா? அல்லது வேண்டுமென்று யாராவது அவரை நோய்காவியாக படுவான்கரைபெருநிலத்துக்கு இறக்கப்பட்டவரா?
என்ற சந்தேகம் உள்ளது.
அல்லது சாதாரண ஒருவரா? அல்லது வேண்டுமென்று யாராவது அவரை நோய்காவியாக படுவான்கரைபெருநிலத்துக்கு இறக்கப்பட்டவரா?
என்ற சந்தேகம் உள்ளது.
தற்போது மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் இவரின் நோய் சம்மந்தமான பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்புதான் இவரின் உண்மையை அறியலாம்.
அதற்கிடையில் கொக்கட்டிச்சோலை பொலிசார். மகிழடித்தீவு வைத்தியசாலை நிர்வாகம், பொதுச்சுகாதார பரிசோதகரின் துரித நடவடிக்கையால் அந்த சந்தேக நபர் சென்ற வீடுகளுக்கு தொற்றுநீக்கி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருடைய வைத்திய அத்தாட்சிபரிசோதனைகளுக்குபின் சம்மந்தப்பட்டவருக்கு கொரோனா நோய் உள்ளதாக கணாப்பட்டால் அவர் நடமாடிய இடங்கள் தனிமைபடுத்துலுக்கு உள்படலாம்.
இதுவே தற்போது என்னால் அறியமுடிகிறது..
#யாராவது இனம் தெரியாதவர்கள் உங்கள் கிராமங்களுக்கு அல்லது வீடுகளுக்கு வருகைதந்தால் அவரிடம் நெருங்கி நின்று கதைக்கவேண்டாம் இரண்டு மீற்றர் தூரத்தில் நின்று கதைத்து சந்தேகமானால் அண்மையில் உள்ள பொலிசாருக்கும் பொது சுகாதார பரிசோதகருக்கும் கிராமசேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்துங்கள்
உங்கள் பாதுகாப்பு, உங்கள் ஊரின் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்.
0 comments: