Home » » ஸ்ரீலங்காவில் ஊரடங்குச்சட்டத்தை நீக்கும் முயற்சியில் அரசு

ஸ்ரீலங்காவில் ஊரடங்குச்சட்டத்தை நீக்கும் முயற்சியில் அரசு

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்குச்சட்டத்தை பகுதி பகுதியாக நீக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களைப் பொறுத்தே மேற்படி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்நதவர்கள் புத்தாண்டுக்கு தமது இடங்களுக்கு செல்ல அரசாங்கத்திடம் போக்குவரத்து வசதிகளை கோரியுள்ளதாகவும் அவ்வாறு அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிளால் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |