பல்வேறு பகுதிகளுக்கு பகல் வேளைகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இதன்படி பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என அறிவித்துள்ளனர்.
ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு, கம்பஹா, கழுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பகல் வேளையில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: