Home » » முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார் அவா்களின் வேண்டுகோளுக்கமைய 4ம் கட்ட நிவாரணப்பணி

முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார் அவா்களின் வேண்டுகோளுக்கமைய 4ம் கட்ட நிவாரணப்பணி


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை சேர்ந்த 240 குடும்பங்களுக்கு லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதியுதவியுடன் 240,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் ஆலய தலைவர் திரு.ரட்ணசிங்கம், தற்போதைய தலைவர் கருணைலிங்கம் மற்றும் அறங்காவலர் சபையினரும் இதற்கான நிதியுதவியை செய்திருந்தனர். இவர்களுக்கு கட்டுமுறிவு மக்கள் தமது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக லண்டன் ஈலிங் கனக துர்க்கை ஆலயம் கட்டுமுறிவு கிராமத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.








முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமாா் அவா்களின் வேண்டுகோளுக்கமைய 4ம் கட்ட நிவாரணப்பணி

Rating: 4.5
Diposkan Oleh:
Batticaloa News Plus
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |