Home » » ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து! ஒருவர் பலி 29 பேர் காயம்

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து! ஒருவர் பலி 29 பேர் காயம்

வரகாபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு நபர்களை அழைத்து சென்ற பேருந்து ஒன்றும் காய்கறிகளை ஏற்றி சென்ற சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வரகாபொல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் கடற்படை சிப்பாய்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 237 பேர் கொரோனா தொாற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |