Home » » 226 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!

226 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 226 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 147 சிப்பாய்களும், கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்தவர்களில் 79 சிப்பாய்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 21 கடற்படை சிப்பாய்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |