Home » » அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் இறக்கலாம் என அஞ்சப்படுகிறது

அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் இறக்கலாம் என அஞ்சப்படுகிறது

உலக தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகரித்துள்ளது.
நேற்றிரவு 11 மணி வரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 3 ஆயிரத்து 305 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 ஆயிரத்து 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 592 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் மாத்திரம் கொரோனா காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 75 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
உலக சுகாதார நெருக்கடி மாத்திரமல்லாது பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவும் புதிய கேந்திர நிலையமாக அமெரிக்கா மாறியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |