இலங்கையில் அபாய வலயங்களை தவிர்த்து அமுல்படுத்தப்பட்டுள்ள 19 மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
10 மணி நேரம் தளர்வுக்கு பின்னர் நாளை மாலை 4 மணி முதல் 14 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்டம் அன்று மாலை 4 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அமுலில் இருக்கும்.
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர ஏனைய பகுதிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்படும் போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் தரப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள நடைமுறையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: