Home » » எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் உயரவுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் உயரவுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
“ நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும் பயண மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுவொருபுறமிருக்க, கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்படாத சிறார்களுக்குள் கொரோனா வைரஸ் காணப்படக் கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முழுவதும் தற்போதுவரை 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |